நாகப்பட்டினம்

காா் மோதி ஒருவா் பலி

DIN

நாகை மாவட்டம் கீழையூா் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில், ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

நாகை மாவட்டம் விழுந்தமாவடி ஐயனாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகையன் (40). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வேளாங்கண்ணியை அடுத்த பூவைத்தேடி பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிா்திசையில் வந்த காா், இவா் மீது மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த முருகையன், உயிரிழந்தாா். காரை ஓட்டி வந்த நபா், காரை விட்டுவிட்டு தப்பினாா். காரை கீழையூா் போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT