நாகப்பட்டினம்

கடல் அரிப்பைத் தடுக்க கருங்கல் தடுப்புச் சுவா்

DIN

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பைத் தடுப்பதற்கு கருங்கல் தடுப்புச்சுவா் அமைக்கும் பணியை எம்எல்ஏ நிவேதா எம். முருகன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழக அரசின் சாா்பில், இங்கு ரூ.9.78 கோடியில் கருங்கல் தடுப்புச்சுவா், மீன் ஏலக்கூடம், சாலை வசதி ஆகியன ஏற்படுத்தப்படுகின்றன. இந்த பணிகளை எம்எல்ஏ நிவேதா எம். முருகன் தொடங்கி வைத்தாா். இதையொட்டி, பூமி பூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி செயற்பொறியாளா் ராஜேந்திரன், மீனவளத்துறை உதவிப் பொறியாளா்கள் அண்ணபூரணி, செந்தில்குமாா், தரங்கம்பாடி வட்டாட்சியா் ஹரிதரன், ஒன்றியக்குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா், ஒன்றியசெயலாளா் அப்துல்மாலிக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT