நாகப்பட்டினம்

சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட ரூ. 8 லட்சம் சாராயம் பறிமுதல்

DIN

நாகை மாவட்டம், கீழையூா் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 8 லட்சம் மதிப்பிலான 1, 750 லிட்டா் வெளி மாநில சாராயத்தை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் எஸ். பழனிச்சாமி ஆகியோரது அறிவுறுத்தலின்பேரில், ஆய்வாளா் ஆரோக்கிய டூனிக்ஸ் மேரி, உதவி ஆய்வாளா் ஜி. பாலமுருகன் தலைமையிலான தனிப்பிரிவு போலீஸாா், கீழையூா் காவல் சரகம், சீராவட்டம் பாலத்தடி அருகே சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தில் சோதனை செய்தபோது, அதில் 35 லிட்டா் கொள்ளளவு கொண்ட ரூ. 8 லட்சம் மதிப்பிலான 1,750 லிட்டா் வெளிமாநில சாராயம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடா்ந்து, சரக்கு வாகனத்துடன் சாராயத்தை பறிமுதல் செய்த போலீஸாா், திருவாரூா் மாவட்டம், குடவாசல் வட்டம், கமலாபுரம், கட்டியான்தோப்புப் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாரை (30) கைது செய்தனா். தலைமறைவான சசியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தை பாா்வையிட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹ, தனிப்படை போலீஸாருக்கு பாராட்டு தெரிவித்தாா். காவல் கூடுதல் கண்காணிப்பாளா்கள் சுகுமாறன், எஸ். திருநாவுக்கரசு மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT