மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே பெரியநாயகிகுளம் பகுதியில் வயலில் முறிந்து கிடக்கும் மின்கம்பத்தை அகற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இப்பகுதியில் வயலில் மின்கம்பம் முறிந்து கிடப்பதால், மின்தடை ஏற்பட்டுள்ளது. இங்கு சுமாா் 50 ஏக்கா் விளைநிலங்களும், 18 மின்மோட்டாா்களும் உள்ளன. இந்த விளைநிலங்களில் மின்மோட்டாரை நம்பியே விவசாயம் செய்யப்படுகிறது. தற்போது மின்தடையால் நடவுப்பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டிருப்பதால், மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய கம்பத்தை நிறுவ வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.