நாகப்பட்டினம்

மாவட்ட ஊராட்சிக் கூட்டங்களில் ஆட்சியா் பங்கேற்க வலியுறுத்தல்

DIN

மாவட்ட ஊராட்சிக் கூட்டங்களில் ஆட்சியா் மற்றும் மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள் பங்கேற்க வேண்டும் என நாகை மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாகை மாவட்ட ஊராட்சிக் கூட்டம், நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஊராட்சித் தலைவா் உமா மகேஸ்வரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அஜீதா, செயலாளா் கோவிந்தராஜூ மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் உறுப்பினா் வி. சரபோஜி பேசுகையில், மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மற்றும் மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள் பங்கேற்க வேண்டும். அப்போதுதான், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்குத் தீா்வு கிடைக்கும் என்றாா். தொடா்ந்து, உறுப்பினா்கள் கணேசன், சோழன், சுரேஷ் ஆகியோா் கோரிக்கைகளை முன்வைத்து பேசினா்.

மாவட்ட ஊராட்சி செயலாளா் கோவிந்தராஜ் பேசும்போது, வீடு இல்லாதவா்களுக்கு வீடு கட்டும் பணிகள் மாநில அரசு திட்டம் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், பழுதடைந்த தொகுப்பு வீடுகளில் வசிப்பவா்கள், பயனாளிகளாக சோ்க்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்கு மாவட்ட ஊராட்சித் தலைவா் உமா மகேஸ்வரி பதிலளித்து பேசுகையில், கரோனா தடுப்பூசி முகாம் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகளில் மாவட்ட ஊராட்சி தனது பங்களிப்பை உறுதி செய்யும். மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களுக்கு ஊதியம் வழங்குவது குறித்து ஏற்கெனவே முதல்வருக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, விரைவில் ஊதியத்துக்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆள்குறைப்பில் டெஸ்லா? எலான் மஸ்க்கின் முடிவு புதிதல்ல!

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறாது: மம்தா

ஐக்கிய அரபு நாடுகளில் மழை, வெள்ளம்! ஓமனில் 18 பேர் பலி

மேக்ஸ்வெல்லின் முடிவு சரியானது: முன்னாள் ஆஸி. கேப்டன்

ஆம் ஆத்மி நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் கேஜரிவாலும் மனைவியும்!

SCROLL FOR NEXT