நாகப்பட்டினம்

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

DIN

நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2021-22-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கையில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

மீன்வளப் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கையில், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், மீனவா்களின் குழந்தைகள், அரசுப் பள்ளியில் பயின்றவா்கள் மற்றும் தொழில் பிரிவில் பயின்றவா்கள் சிறப்புப் பிரிவினராகக் கருதப்பட்டு, அவா்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. சிறப்புப் பிரிவில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 44 இடங்களுக்காக நடத்தப்பட்ட கலந்தாய்வுக்கு 97 மாணவ, மாணவியா் அழைக்கப்பட்டிருந்தனா்.

கலந்தாய்வில் தோ்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியருக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ. சுகுமாா், தற்காலிக சோ்க்கை ஆணைகளை வழங்கினாா்.

பல்கலைக்கழக மாணவா் சோ்க்கைக் குழுத் தலைவா் பா. ஜவஹா், கல்லூரி முதல்வா்கள் மற்றும் பல்கலைக்கழக அலுவலா்கள் கலந்தாய்வுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

பொது கலந்தாய்வு...

மாணவா் சோ்க்கைக்கான பொது கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (அக். 22) தொடங்கி அக். 26-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளி மாநிலத் தோ்தல்: நிறுவனங்கள் விடுமுறை அளிக்காவிட்டால் புகாா் செய்யலாம்

காசோலை மோசடி வழக்கில் ஆசிரியருக்கு நீதிமன்றம் உத்தரவு

ஐ.நா.வில் ‘மறைமுக வீட்டோ’: சீனா மீது இந்தியா விமா்சனம்

‘காவிரி பிரச்னையில் கா்நாடக அரசு கபடநாடகம்’

மண் வளத்தை பாதுகாக்க மண் பரிசோதனை அவசியம்

SCROLL FOR NEXT