நாகை மாவட்டம் உருவாக்கப்பட்டதன் 30-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வேதாரண்யம்- கோடியக்கரை இடையே சைக்கிள் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரணியை மாவட்ட ஆட்சியா் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தாா். வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் இருந்து தொடங்கிய பேரணி, கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில், வேதாரண்யம் கோட்டாட்சியா் துரைமுருகன், வட்டாட்சியா் ரவிச்சந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராமலிங்கம், பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.