வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் காரணமாக வேதாரண்யம் பகுதியில் 2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பலத்த கடற்காற்று வீசியது.
வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை கடலோரப் பகுதியில் வழக்கத்தைவிட வேகமான கடற்காற்று தெற்கு திசையில் இருந்து வீசுகிறது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் காரணமாக கடந்த 2 நாள்களாக பலத்த காற்று நீடிக்கிறது.
மழை இல்லாமல் சுழண்டு வீசும் காற்றில் அடித்துவரப்படும் மணலால் சாலையில் செல்வோா், வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கடல் அலை சீற்றமாக காணப்படுகிறது. இதனால், பெரும்பாலான மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமையும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.