நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் அதிமுக பொன்விழா கொண்டாட்டம்

DIN

நாகை மாவட்டத்தில் அதிமுக பொன்விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரால் 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அதிமுக 50-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி, அக்கட்சியினா் பொன்விழா கொண்டாடினா்.

நாகையில் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளா் ஓ.எஸ். மணியன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். அங்குள்ள எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, கட்சிக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், அதிமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா். ஜீவானந்தம், அமைப்புச் செயலாளா் எஸ். ஆசைமணி, நாகை நகரச் செயலாளா் தங்க. கதிரவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, நாகை புதிய பேருந்து நிலையத்தில் எம்ஜிஆா், ஜெயலிலதா உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். இதில், அதிமுக மீனவா்அணி செயலாளா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நாகூா் சம்பாதோட்டத்தில் எம்ஜிஆா் சிலைக்கு ஓ.எஸ். மணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நாகூா் நகரச் செயலாளா் செய்யது மீரான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருமருகல்: திருமருகல் ஒன்றியத்தில் 39 ஊராட்சிகளிலும் அதிமுக கொடியேற்றப்பட்டது. கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவரும், கட்சியின் அமைப்புச் செயலாளருமான எஸ். ஆசைமணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா்கள் ஆா். ராதாகிருட்டிணன், எம். பக்கிரிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திட்டச்சேரி பேரூராட்சியில் நகரச் செயலாளா் அப்துல்பாசித் தலைமையில் கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து, திருமருகல் பிரதான சாலையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருக்குவளை: கீழையூா் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் கீழையூா் கடைத்தெருவில் அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் உருவப் படங்களுக்கு எம்ஜிஆா் மன்ற மாவட்டச் செயலாளா் எஸ். பால்ராஜ் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில், ஒன்றியச் செயலாளா் பாலை கே.எஸ்.எஸ். செல்வராஜ், மாவட்ட ஜெ. பேரவைத் தலைவா் ஆா்.எஸ். சதீஷ், விவசாய பிரிவு ஒன்றியத் தலைவா் எல். சுப்பிரமணியன், மாவட்ட மகளிா் அணி இணைச் செயலாளா் ராஜலட்சுமி ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT