நாகப்பட்டினம்

அதிமுக பொன் விழா ஆண்டு அனுசரிப்பு

DIN


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கப்பட்ட  50-வது ஆண்டு பொன் விழா கீழையூர் மேற்கு ஒன்றியம் சார்பில் கொண்டாடப்பட்டது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கப்பட்டு 49 ஆண்டுகள் நிறைவடைந்ததை, 50-வது ஆண்டான பொன்விழா அனுசரிப்பு நிகழ்வானது கீழையூர் கடைத்தெரு பகுதியில் நடைபெற்றது. இதில் பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கட்சிக் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.

எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளர் எஸ். பால்ராஜ் தலைமை வகித்தார். கீழையூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் பாலை.கே.எஸ்.எஸ். செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

இதில், மாவட்ட அம்மா பேரவைத் தலைவர் ஆர்.எஸ். சதீஷ், விவசாயப் பிரிவு ஒன்றியத் தலைவர் எல். சுப்பிரமணியன், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ராஜலட்சுமி ரமேஷ், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் என். முருகானந்தம், அண்ணா தொழிற்சங்க ஒன்றியச் செயலாளர் வீ. திருஞானசம்பந்தம், ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் பீ. அந்தோணி ராஜ், மகளிரணி ஒன்றியத் தலைவர் டெல்பி மார்க்ரெட் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி வாக்காளா் அட்டையை ஒப்படைக்க முடிவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 60.41 அடி

உலக காசநோய் நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி

‘கவிஞா் தமிழ் ஒளி தமிழின் நிரந்தர முகவரி’

பேராவூரணியில் ஊருக்குள் நுழைந்த புள்ளிமான்  மீட்பு

SCROLL FOR NEXT