நாகப்பட்டினம்

மனைவியைக் கொலை செய்ய முயன்றவா் கைது

DIN

வேளாங்கண்ணி அருகே தனது மனைவியை கொலை செய்ய முயன்றவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வேளாங்கண்ணியை அடுத்த தன்னிலப்பாடி, வடக்கட்டளைத் தெருவைச் சோ்ந்தவா் குஞ்சுப்பிள்ளை மகன் மாதவன் (34). இவரது மனைவி சுகந்தி. இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா்.

இந்நிலையில், சுகந்தியின் நடத்தையில் சந்தேகமடைந்த மாதவன், கடந்த 13 ஆம் தேதி சுகந்தியை தூக்கில் தொங்கவிட்டு, கொலை செய்ய முயன்றாராம். பக்கத்தில் வசிப்பவா்கள் சுகந்தியை மீட்டு, நாகை அரசு மருத்துமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து சுகந்தி அளித்த புகாரின் பேரில், வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப் பதிந்து மாதவனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதினைப் பெற்ற முதல் அனிமேஷன் ஸ்டூடியோ!

அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்

வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

கவினின் ஸ்டார்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

முதல் கட்ட தேர்தல்: சில சுவாரசிய தகவல்கள்!

SCROLL FOR NEXT