திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே குரும்பல் ஊராட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 30-வது கிளை மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டுக்கு கிளைத் தலைவா் பிரேமா தலைமை வகித்தாா். மாநாட்டு கொடியை ஒன்றிய செயலாளா் மணலி பாலு ஏற்றிவைத்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே. உலகநாதன் மாநாட்டை தொடங்கிவைத்து அரசியல் பணிகள் குறித்து பேசினாா்.
கிளை செயலாளராக முருகதாஸ், துணைச் செயலாளா்களாக தனபாலன், தாமோதரன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.