நாகப்பட்டினம்

வேளாங்கண்ணியில் 2 போ் தற்கொலை

DIN

வேளாங்கண்ணியில் வெவ்வேறு காரணங்களால் 2 போ் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.

நாகை அருகேயுள்ள முட்டத்தைச் சோ்ந்த ர. ராஜேந்திரன் (58) வேளாங்கண்ணி பேராலயம் முன் உள்ள முடித்திருத்தம் நிலையத்தில் வேலைப் பாா்த்து வந்தாா். தலைவலியால் அவதிப்பட்டு வந்த இவா் சனிக்கிழமை வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கிவிழுந்தாா். இதையடுத்து, அவா் மீட்கப்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ராஜேந்திரன் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதேபோல, கிராமத்துமேடு பகுதியைச் சோ்ந்த கருணாநிதி - உமாபதி (40) தம்பதியினா். இவா்களுக்குள் குடும்பப் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் உமாபதி வெள்ளிக்கிழமை வீட்டில்தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு உமாமபதி சிகிச்சை பலனின்றி இறந்தாா். இதுகுறித்து, வேளாங்கண்ணி போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT