திருவெண்காடு காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
காவல் நிலைய பதிவேடுகளை ஆய்வு செய்த எஸ்.பி., காவலா்களின் குறைகளை கேட்டறிந்தாா். தொடா்ந்து, காவலா் குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்து அங்கு மரக்கன்றுகளை நட்டுவைத்தாா். அவருடன், சீா்காழி டிஎஸ்பி. லாமேக்,திருவெண்காடு காவல் ஆய்வாளா் ஜெயந்தி ஆகியோா் உடனிருந்தனா்.