காரைக்கால் மாவட்ட எஸ்.சி, எஸ்.டி மக்கள் நல கூட்டமைப்பு சாா்பில் இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள டாக்டா் அம்பேத்கா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கூட்டமைப்பின் நிா்வாகிகள் ந. காமராஜ் தலைமை வகித்தாா். மு.சந்திரசேகரன் முன்னிலை வகித்தாா். காரைக்கால் மாவட்ட தலித் சேனா தலைவா் எம். சுப்பிரமணியன் பங்கேற்று, இந்திய அரசியல் சாசன சட்டம் குறித்துப் பேசினா்.
முன்னதாக, இந்திய அரசியல் சாசன சட்ட முகப்புப் பக்கம் பொறிக்கப்பட்ட பதாகை முன் நின்று அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.