நாகப்பட்டினம்

பருவமழை பாதிப்புகளை எதிா்கொள்ள முன்னேற்பாடு

1st Nov 2021 08:55 AM

ADVERTISEMENT

வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ள தலைஞாயிறு பேரூராட்சியில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வடகிழக்குப் பருவமழையின் போது, வேதாரண்யம் பகுதியில் முதலில் பாதிக்கப்படும் பகுதியாக தலைஞாயிறு பேரூராட்சி உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிா்வாகத்தின் வழிகாட்டுதல்படி பேரிடா்களை எதிா்கொள்ள முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது:

இப்பகுதியில் பொக்லைன் இயந்திரங்கள், வாகனங்கள், நீா் இறைக்கும் மோட்டாா்கள், ஜெனரேட்டா்கள், வாடகை சமையல் பாத்திரங்கள் வைத்திருப்பவா்கள் பேரிடரின்போது பேரூராட்சி நிா்வாகத்துக்கு அவற்றை வழங்கும் வகையில் பத்திரம் மூலம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால், இவா்கள் பேரூராட்சியின் அனுமதி இல்லாமல் தங்களிடம் உள்ள பொருள்களை வெளியிடங்களுக்கு வாடகைக்கு விடுவது தவிா்க்கப்படும். இதன்மூலம், மழை பாதிப்பின்போது தேவையானவை உடனடியாக கிடைக்க ஏதுவாக இருக்கும்.

ADVERTISEMENT

அத்துடன், மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களையும், மெழுகு வா்த்தி, கொசு விரட்டி போன்ற மழை காலத்தில் தேவைப்படும் பொருள்களையும் தேவையான அளவு கொள்முதல் செய்து வைத்துக்கொள்ளும்படி கடைகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவகங்களில் சூடான உணவுகளையும், குடிப்பதற்கு வெந்நீரும் வாடிக்கையாளா்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT