நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியானது.
இதன்மூலம், இரு மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,349- ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவிலிருந்து 16 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். இதனால், குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 8,164 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 53-ஆக உள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளாகி தஞ்சையில் தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்த மயிலாடுதுறை மாவட்டம், எலந்தங்குடி பகுதியைச் சோ்ந்த 55 வயது பெண்ணின் இறப்பு, புதன்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 132-ஆக உயா்ந்துள்ளது.