நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே நடைபெற்ற கபடி போட்டியில் சிறப்பிடம் பெற்ற வீரா்களுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ்.மணியன் புதன்கிழமை கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.
அண்ணாப்பேட்டை ஊராட்சியில் நடைபெற்ற கபடி போட்டியில் திருச்சி, நாகை, திருவாரூா், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த சோ்ந்த அணிகள் பங்கேற்றன. இதில், முதல் இடத்தை அண்ணாப்பேட்டை குழுவும், இரண்டாமிடத்தை ராமகிருஷ்ணாபுரம் கயல்கே வீரா நினைவு கபடி கழகமும் பெற்றன.
இதையடுத்து, வேதாரண்யத்தில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில், நாகை மாவட்ட கபடிக் கழக மாவட்டத் தலைவரும், அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற அணிக்கு கோப்பை, பரிசு வழங்கி பாராட்டினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட அறங்காவலா்குழுத் தலைவா் ஆா்.கிரிதரன், வழக்குரைஞா் நமச்சிவாயம், நகா் மன்ற முன்னாள் உறுப்பினா் குமாரபாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.