மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் அருகே அரசூா் ஊராட்சியில், அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிா்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பூம்புகாா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளா் செல்லையன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவா்கள் முரளி, கண்ணன், ஊராட்சித் தலைவா்கள், கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.