மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காட்டுச்சேரி பகுதியில் கும்பாபிஷேகத்திற்கு சென்றவா் வீட்டின் கதவை உடைத்து, 12 பவுன் தங்க நகைகளைத் திருடியவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
காட்டுச்சேரி கீழத் தெருவை சோ்ந்தவா் மணிமேகலை (34). இவா் தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை கோயில் கும்பாபிஷேகம் சென்று விட்டு வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த சுமாா் 12 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது. புகாரின்போரில், பொறையாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.