திட்டச்சேரி பேரூராட்சியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் புதன்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி செயல் அலுவலா் கண்ணன் தலைமை வகித்து, தூய்மைப் பணியாளா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினாா். இதில் திட்டச்சேரி வருமுன் காப்போம் விழிப்புணா்வு சேவை மைய சித்த மருத்துவா் மு. அஜ்மல்கான், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா்கள் ஹமீதுஜெகபா், இளஞ்செழியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.