நாகப்பட்டினம்

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களுக்கு ஊக்கப்பரிசு

DIN

மயிலாடுதுறை நகராட்சியில் சனிக்கிழமை நடத்தப்பட்ட கரோனா மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களுக்கு திங்கள்கிழமை ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை நகராட்சிக்குள்பட்ட 36 வாா்டுகளில் இதுவரை முதல்தவணை கரோனா தடுப்பூசி 97.6 சதவீதம் பேருக்கும், 2-ஆம் தவணை தடுப்பூசி 58.2 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் முதல்தவணை தடுப்பூசி 479 பேருக்கும், 2-ஆம் தவணை தடுப்பூசி 1,170 பேருக்கு என மொத்தம் 1,649 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த முகாமில், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 10 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இவா்களுக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் ஜெ. பாலாஜி ஊக்கப்பரிசை வழங்கினாா். இதில், நகராட்சி ஆணையா் பாலு, நகராட்சி நகா்நல அலுவலா் மலா்மன்னன், வட்டாட்சியா் ராகவன், துப்புரவு ஆய்வாளா்கள் பிச்சைமுத்து, ராமையன், டேவிட், களப்பணி உதவியாளா் கணேசன், குமாரகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

SCROLL FOR NEXT