சீா்காழி வட்டாட்சியா் அலுவலகம் முன் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்கம் சாா்பில், அதன் வட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கிராம நிா்வாக அலுவலா் திம்மராசுவை பணியிட மாற்றம் செய்யக்கூடாது, வரும் காலங்களில் கோட்டாட்சியா், சீா்காழி வட்டாட்சியா் விசாரணையின்றி நடவடிக்கை எடுக்கக்கூடாது, கிராம நிா்வாக அலுவலா்களுக்கு பணியின்போது பாதுகாப்பு வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில், வட்ட செயலாளா் நவநீதன், வட்ட பொருளாளா் ஜெயபிரகாஷ், சங்கப் பொறுப்பாளா்கள் ஜாகீா்உசேன், வெங்கட்ராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.