நாகப்பட்டினம்

நாகை: 7.12 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி:ஆட்சியா்

DIN

நாகை மாவட்டத்தில் இதுவரை 7.12 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

நாகை மாவட்டத்தில் புதிதாக 25 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் என 400 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

சிக்கல், ஆழியூா், கீழ்வேளூா், அத்திப்புலியூா், கூத்தூா், இலுப்பூா், பட்டமங்கலம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களையும், கடம்பங்குடியில் நடைபெற்ற இல்லம் தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியையும் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, நாகை மாவட்டத்தில் டிசம்பா் 3-ஆம் தேதி வரை 4,20,689 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 2,91,466 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. தகுதியான அனைவருக்கும் இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிா்வாகம் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT