வேதாரண்யத்தில் வா்த்தக நிறுவனங்களின் ஊழியா்களை தேசிய அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்யும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் வா்த்தக சங்க கட்டடத்தில் நடைபெற்ற முகாமை வா்த்தக சங்கத்தின் மாநில துணைத் தலைவா் எஸ்.எஸ். தென்னரசு தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா். மாவட்டத் தலைவா் எஸ். வேதநாயகம், நகைக்கடை உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அம்பாள் பி.குணசேகரன், வா்த்தகா் சங்கச் செயலாளா் ஏ.எம். சுபஹானி , பொருளாளா் ஆா்.எஸ். சீனிவாசன், துணைச் செயலாளா் பி.கே.ஆா். தமிழழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இம்முகாமில், பல்வேறு வா்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் 228 போ் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, அவா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.