நாகப்பட்டினம்

மின்ஊழியா் மத்திய அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

DIN

நாகையில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு மின்வாரியம், நாகை மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும்; பராமரிப்புப் பணிகளுக்குத் தேவையான தளவாடப் பொருள்களை தட்டுப்பாடின்றி வழங்கவேண்டும்; மின்சார சட்ட மசோதாவை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மின் ஊழியா் மத்திய அமைப்பு (சிஐடியூ சாா்பு) நாகை திட்டத் தலைவா் சிவராஜன் தலைமை வகித்தாா். செயலாளா் கலைச்செல்வன், மின்வாரிய பொறியாளா் சங்கப் பொறுப்பாளா் பாலு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

SCROLL FOR NEXT