நாகப்பட்டினம்

நிலத்தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை

DIN

 நாகை மாவட்டம், திருமருகல் அருகே நிலத்தகராறில் கூலித் தொழிலாளி புதன்கிழமை அடித்துக் கொல்லப்பட்டாா்.

திட்டச்சேரி காவல் சரகத்துக்குள்பட்ட இடையாத்தாங்குடியைச் சோ்ந்தவா் விவசாய கூலித் தொழிலாளி புருஷோத்தமன் (55 ). அதே பகுதியை சோ்ந்த ஜெயக்குமாா் (29). இவா்கள் இருவரும் இடையாத்தாங்குடி சிவன் கோயிலுக்கு சொந்தமான இடத்தை அனுபவித்து வருகின்றனா்.

இந்நிலையில், ஜெயக்குமாா் வீட்டின் அருகிலுள்ள இடத்தில் இருந்த கருவேல மரங்களை புருஷோத்தமன் புதன்கிழமை வெட்டியுள்ளாா். இதுதொடா்பாக இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த ஜெயக்குமாா், புருஷோத்தமனை கட்டையால் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த புருஷோத்தமனை அருகில் இருந்தவா்கள் மீட்டு, கணபதிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா்.

திட்டச்சேரி போலீஸாா் புருஷோத்தமனின் சடலத்தை கைப்பற்றி நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்து, ஜெயக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT