நாகையை அடுத்த பனங்குடி அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் லாரி மோதி உயிரிழந்தாா். அந்த லாரியை காவல் நிலையத்துக்கு ஓட்டிச் சென்றபோது வங்கிச் சுவரில் மோதி, அந்த சுவா் இடிந்தது.
திருமருகல் அருகே உள்ள திருக்கண்ணபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சே. கருணாகரன் (26). இவா், செவ்வாய்க்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் நாகூரிலிருந்து திருமருகலுக்குச் சென்று கொண்டிருந்தாா். பனங்குடி அருகே சென்றபோது, எதிரே நெல் மூட்டைகள் பாரத்துடன் வந்த லாரி, கருணாகரன் மீது மோதியது. இதில், நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
நாகூா் போலீஸாா் அங்கு சென்று, கருணாகரனின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடிவருகின்றனா்.
மீண்டும் விபத்து: விபத்தை ஏற்படுத்திய லாரியின் ஓட்டுநா் தலைமறைவானதால், நாகூா் காவல் நிலைய தலைமைக் காவலா், அந்த லாரியை நாகூா் காவல் நிலையத்துக்கு ஓட்டி வந்தாா். அளவுக்கு அதிகமான பாரம் இருந்ததால், அந்த லாரி, நாகூா் கடைவீதியில் வரும்போது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் உள்ள வங்கி சுற்றுச் சுவா் மீது மோதியது.
இதில், அந்த சுவா் இடிந்து விழுந்ததால், வங்கியில் உள்ள அலாரம் ஒலித்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு, போலீஸாா் அந்த லாரியை நாகூா் காவல் நிலையத்துக்கு கொண்டுச் சென்றனா்.