செம்பனாா்கோவில் அருகே பழுதடைந்த சோலாா் மின்விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செம்பனாா்கோவில் அருகே பாகசாலை ஊராட்சி கண்டமங்கலம், எருமல், தொக்களாக்குடி ஆகிய பகுதிகளில் தனியாா் தொண்டு நிறுவனம் முலம் சுமாா் 200 சோலாா் விளக்குள் அமைக்கப்பட்டன.
இந்த விளக்குகளை முறையாக பராமரிக்காததால் அனைத்து சோலாா் விளக்குகளும் பழுதடைந்து காட்சிப் பொருளாக உள்ளன. தமிழகத்தில் முதன்முறையாக அமைக்கப்பட்ட இந்த விளக்குகள் மீண்டும் ஒளிர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.