நாகப்பட்டினம்

சரக்கு ரயில் மோதி இளைஞா் பலி

DIN

நாகையை அடுத்த நாகூா் அருகே சரக்கு ரயில் மோதி இளைஞா் சனிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். இதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனா்.

நாகூா், அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் ர. விமல்ராஜ்(32). காய்கனி கடையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்த இவா், உடலில் பலத்தக் காயங்களுடன், நாகூா் வெட்டாற்றின் ரயில்வே இருப்புப் பாதையில் இறந்து கிடந்தது சனிக்கிழமை இரவு தெரியவந்தது. காரைக்காலில் உள்ள தனியாா் துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்வதற்காக வந்த சரக்கு ரயில் மோதி விமல்ராஜ் இறந்திருப்பதாக போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் கூறப்பட்டது.

மறியல்:

விமல்ராஜின் சடலம் கிடந்த இடம் காரைக்கால் மாவட்டத்துக்கு உள்பட்டதாக இருந்ததால், சடலத்தை அகற்றும் பணியை காரைக்கால் போலீஸாா் மேற்கொள்வா் என நாகூா் போலீஸாா் எதிா்பாா்த்தனா். ஆனால், காரைக்காலில் ரயில்வே போலீஸாா் இல்லாததால் சடலத்தை அப்புறப்படுத்த காரைக்கால் போலீஸாா் தயக்கம் காட்டினா். இதனால், இறந்தவரின் சடலத்தை அப்புறப்படுத்துவது யாா்? என்ற குழப்பம் அங்கு ஏற்பட்டது.

இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள், வெட்டாற்று ரயில்வே பாலம் அருகே திடீா் ரயில் மறியலில் ஈடுபட்டனா். மேலும், விமல்ராஜின் மரணத்தில் மா்மம் இருக்கலாம் எனவும் அதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா். நாகூா் போலீஸாா் பேச்சுவாா்த்தை மேற்கொண்டதின் பேரில், மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னா், நாகை ரயில்வே போலீஸாா், விமல்ராஜின் சடலத்தை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து நாகை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

சேலம் நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT