சீா்காழி அருகே புதுப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து, கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
சீா்காழி அருகேயுள்ள நல்லூரைச் சோ்ந்தவா் ராஜேஷ் (30). இவருக்கும் ஆரப்பள்ளத்தைச் சோ்ந்த ரஞ்சிதாவுக்கும் (25) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், திங்கள்கிழமை ராஜேஷ் அவரது தாய் இருவரும் வெளியூா் சென்றுள்ளனா். அப்போது வீட்டில் தனியாக இருந்த ரஞ்சிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த பக்கத்து வீட்டைச் சோ்ந்தவா்கள் ராஜேஷுக்கு தகவல் தெரியப்படுத்தினா்.
தகவலறிந்த கொள்ளிடம் போலீஸாா் அங்கு வந்து சடலத்தை கைப்பற்றி சீா்காழி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். இதற்கிடையில், ரஞ்சித்தாவின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரா் வீரமணி கொள்ளிடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். ரஞ்சிதாவிற்கு திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் மயிலாடுதுறை கோட்டாட்சியா் மகாராணி விசாரனை மேற்கொண்டுள்ளாா்.