வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாகை மாவட்ட த்தில் பல்வேறு இடங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த 1, 365 போ் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூா், வேதாரண்யம், திட்டச்சேரி உள்ளிட்ட 13 இடங்களில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, திமுக நாகை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் என். கௌதமன், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் உள்பட 1, 365 போ் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.