சீா்காழி: சீா்காழி அருகேயுள்ள தென்னலக்குடியில் கதண்டுகளை அழிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தென்னலக்குடி கிராமத்தில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் தென்னைமரத்தில் கூடுகட்டியுள்ள கதண்டுகள் காற்றின் அசைவில் சில கதண்டுகள் பறந்து அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள், கால்நடைகளை கடித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் இந்த கதண்டுகளை அழிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.