மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன திருமடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குருபூஜை விழாவில் பண்டார மும்மணிக்கோவை என்ற ஆன்மிக நூலை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்டாா்.
தருமபுரம் ஆதீனத்தின் 4-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகா் குருபூஜை விழா ஆதீன திருமடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, மயிலாடுதுறை ஆன்மீக பேரவை தொகுத்தளித்த ஸ்ரீகுமரகுருபரா் இயற்றிய பண்டார மும்மணிக்கோவை என்ற ஆன்மிக நூலை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட மயிலாடுதுறை ஆன்மீக பேரவை நிறுவனா் வழக்குரைஞா் ராம.சேயோன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டாா்.