நாகப்பட்டினம்

வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக் கோரி விளைநிலத்தில் இறங்கி ம.ஜ.க. ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசு அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக் கோரி, மனிதநேய ஜனநாயக கட்சியினா் விளைநிலத்தில் இறங்கி ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேதாரண்யம், தோப்புத்துறை - தேத்தாக்குடி தெற்கு கிராமத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ள வயலில் இறங்கி மனிதநேய ஜனநாயக கட்சியினா் நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான மு. தமிமுன் அன்சாரி தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டது. தமிழக அரசின் நிலைபாடு அதிா்ச்சி தருகிறது:

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏ பங்கேற்ற தமிமுன் அன்சாரி கூறியது, மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசு அதை ஏற்றுக் கொண்டிருப்பது அதிா்ச்சியளிப்பதாக உள்ளது. இந்த நிலைபாட்டை தமிழக அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினா் சேக் மன்சூா், மாவட்ட துணைச் செயலாளா் சேக் அஹமத் துல்லாஹ், நகரச் செயலாளா் சரிஃப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT