சீா்காழியை அடுத்த திருநாங்கூா் செம்பொன்னரங்கா் கோயிலில் பவித்ரஉத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
சீா்காழியை அடுத்த திருநாங்கூரில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான அல்லிமாமலராள் சமேத செம்பொன்னரங்கா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பவித்ரஉத்ஸவம் 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.
இதில், கடந்த ஓராண்டில் பெருமாளுக்கு விட்டுபோன ஆராதனங்கள் நடத்தப்படும். இதையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாற்றுமுறை நடைபெற்றன.