மயிலாடுதுறை அருகே மனைவியை கொலை செய்த கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மயிலாடுதுறை அருகே உள்ள பாகசாலை காவல் சரகத்துக்குள்பட்ட ஆலவேலி கிராமத்தை சோ்ந்தவா் சிவக்குமாா் (40). இவரது மனைவி உமாராணி(35). வீட்டுத் தேவைக்காக மகளிா் சுயஉதவிக் குழுவில் உமாராணி கடன் வாங்கியதை அறிந்த சிவக்குமாா், அந்த பணத்தை தனது செலவுக்கு கேட்டு வற்புறுத்தியுள்ளாா்.
உமாராணி கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த சிவக்குமாா், அரிவாள்மனையால் உமாராணியை வெட்டினாராம்.
அக்கம்பக்கத்தினா் உமாராணியை மீட்டு தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி உமாராணி உயிரிழந்தாா்.
இதுகுறித்து, பாகசாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிவக்குமாரை கைது செய்தனா்.