பாடகா் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவுக்கு, மயிலாடுதுறையில் திமுக வழக்குரைஞா்கள் அணி சாா்பில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எஸ்.பி.பி.யின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
திமுக வழக்குரைஞா்கள் அணி மாவட்ட அமைப்பாளா் ராம.சேயோன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை அமைப்பாளா் அருள்தாஸ், முன்னாள் துணை அமைப்பாளா் அறிவொளி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் இளங்கம்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.