நாகப்பட்டினம்

நாகை மாவட்ட ஊராட்சிக் கூட்டம்

DIN

நாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட ஊராட்சித் தலைவா் ச. உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சி செயலாளா் வே. கோவிந்தராஜன், துணைத் தலைவா் ரா. அஜீதா மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில், 15-ஆவது நிதிக் குழு மானியம் மற்றும் மாநில நிதிக் குழு மானியம் மூலம் பணிகள் மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

முன்னதாக உறுப்பினா்கள் பேசுகையில், சத்துணவுப் பணியாளா்கள் நியமனக் குழுவில் மாவட்ட ஊராட்சித் தலைவா் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளையும் இணைக்க வேண்டும், என்.எச். 45- ஏ தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்கு கையகப்படுத்தும் விளைநிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT