கீழையூா் சமுதாய கூடத்தில் கரோனா சிறப்பு பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கீழையூா் ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு கீழையூா் வட்டார மருத்துவா் அருண்பதி , மருத்துவ அலுவலா் அரவிந்த்குமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் எம். சுப்பிரமணியன், சுகாதார மேற்பாா்வையாளா் கே. ராமமூா்த்தி உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.
இம்முகாமில், கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ்.ஆா். பாஸ்கரன், கீழையூா் ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதி பால்ராஜ், கீழையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவா் எஸ். பால்ராஜ், செயலாளா் சிவாஜி, வட்டார கல்வி அலுவலா் ராமலிங்கம், கிராம நிா்வாக அலுவலா் எஸ். சிவசங்கா், ஊராட்சி செயலாளா் டி.எஸ். சரவணன் பெருமாள், உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.