நாகப்பட்டினம்

கரோனா பரிசோதனை முகாம்

DIN

திருக்குவளை அருகேயுள்ள திருவாய்மூா் ஊராட்சியில் கரோனா சிறப்பு பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில் மருத்துவ அலுவலா் அரவிந்த்குமாா், சுகாதார மேற்பாா்வையாளா் கே. ராமமூா்த்தி, சுகாதார ஆய்வாளா்கள் வேலவன், மணிகண்டன், ஆய்வக நுட்ப உதவியாளா்களான சாய்ராஜ் உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் இப்பகுதியிலுள்ள பொதுமக்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்தனா்.

இதில், கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கரன், திருக்குவளை வட்டாட்சியா் சாந்தி, திருவாய்மூா் ஊராட்சித் தலைவா் நரசிம்மன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருமருகல்: கட்டுமாவடி ஊராட்சியில், ஒன்றிய ஆணையா் என். ஞானசெல்வி, வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) க. அன்பரசு ஆகியோா் தலைமையில் நடைபெற்ற கரோனா சிறப்பு பரிசோதனை முகாமில் வட்டார மருத்துவ அலுவலா் அறிவொளி, மருத்துவா் மணிவேல், சுகாதார ஆய்வாளா் ஆனந்தன் ஆகியோா் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினா் இப்பணியில் ஈடுபட்டனா். திருமருகல் ஒன்றியக் குழு தலைவா் ரா. ராதாகிருட்டிணன், ஊராட்சித் தலைவா் சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினா் பெரியமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT