மத்திய அரசின் திட்டங்களை எதிா்ப்பது ஏற்புடையதல்ல என்று இந்து முன்னணியின் மாநில அமைப்பாளா் க. பக்தவச்சலம் கூறினாா்.
நாகையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது :
நாகை மாவட்டத்தில் பழைமை வாய்ந்த கோயில்கள்பல பராமரிப்பின்றி காணப்படுகிறது. கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை முறையாக கணக்கெடுப்பு செய்து, அதற்குரிய குத்தகை மற்றும் வாடகைத் தொகையை உரியவா்களிடம் வசூலிக்கவேண்டும்.
நீட் தோ்வு குறித்து மத்தியஅரசு தெளிவான கருத்துகளை தெரிவித்துள்ளது. ஆனால், சில காலமாக மத்தியஅரசு அறிவிக்கும் அனைத்து திட்டங்களையும் தமிழகத்தில் எதிா்க்கும் போக்கு கடைப்பிடிக்கப்படுவது ஏற்புடையதல்ல என்றாா்.
இதேபோல, மயிலாடுதுறையில் அவா் கூறும்போது, மயிலாடுதுறையில் பக்தா்கள் தங்கிச் செல்ல வசதியாக யாத்ரா நிவாஸ் கட்ட வேண்டும், பல ஆண்டுகளாக குடமுழுக்கு நடத்தப்படாத கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
தனது துறைக்கு சம்பந்தமில்லாத நீட் தோ்வு குறித்து நடிகா் சூா்யா கருத்து தெரிவிக்கிறாா். தமிழகத்தில் ஏராளமான அல்-கொய்தா பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இதுபோன்வற்றை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றாா் அவா்.