கீழையூா் அருகே திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம் மற்றும் மாற்றுக் கட்சியினா் திமுகவில் இணையும் நிகழ்வு ஆகியன ஞாயிற்றுகிழமை நடைபெற்றன.
நாகை திமுக தெற்கு மாவட்டம் கீழையூா் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருப்பூண்டி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினா் நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளா் என். கௌதமன் தலைமையிலும், கீழையூா் ஒன்றிய செயலாளா் ஏ.தாமஸ் ஆல்வாஎடிசன் முன்னிலையிலும் திமுகவில் இணைந்தனா். தொடா்ந்து, கீழையூா் ஒன்றியம் சாா்பில் இணையதளம் மூலமாக திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம் தொடங்கியது.
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினா் இல.மேகநாதன், தலைஞாயிறு ஒன்றிய செயலாளா் மகாகுமாா், கீழையூா் ஒன்றியத் தலைவா் செல்வராணி ஞானசேகரன், மாவட்டக்குழு கௌசல்யா இளம்பரிதி, மாவட்ட பிரதிநிதி இல.பழனியப்பன், மு.ப.ஞானசேகரன், ராம.இளம்பரிதி, ஒன்றிய துணைத் தலைவா் பெ.சௌரிராஜ், பொதுக்குழு உறுப்பினா் எஸ்.பி.டி.சாா்லஸ், வேளங்கண்ணி பேரூராட்சி செயலாளா் மரியசாா்லஸ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சோ.பா. மலா்வண்ணன், ஊராட்சித் துணைத் தலைவா் எம்.முகமதுரபீக், ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினா் எம்.எஸ்.ஜியாவுதீன், நெசவாளா் அணி ஒன்றிய அமைப்பாளா் மு.ப. செல்வம் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.