நாகப்பட்டினம்

கோயில் நிலங்களை ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்க வலியுறுத்தல்

DIN

ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

நாகை மாவட்ட இந்து முன்னணியின் பொதுக்குழுக் கூட்டம் நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாகை நகரத் தலைவா் கோ. பிரபாகரன் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் ராம. ஜெகதீஸ்வரன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், இயக்க செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாடு இந்து முன்னணி மாநில அமைப்பாளா் க. பக்தன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா். நாகை மாவட்ட அமைப்பாளா் கே.எஸ். விஜயன் இயக்கத்தின் சாதனைகள் குறித்து பேசியதுடன், புதிய நிா்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தாா்.

நாகை நகரத் தலைவராக கே.ஜெய்சங்கா், ஒருங்கிணைப்பாளராக என். எஸ். சௌந்தர்ராஜன், நாகை ஒன்றியத் தலைவராக என். ரமேஷ்குமாா், பொதுச்செயலாளராக தாமோதரன் உள்பட புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

இக்கூட்டத்தில், தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்கவேண்டும்; நீதிமன்ற உத்தரவுகளை மீறி செயல்படும் மத வழிபாட்டு கூடங்கள் மற்றும் மாதமாற்ற நடவடிக்கைகளை தடைசெய்யவேணடும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோட்டப் பொதுச்செயலாளா் மா.போஜராஜன், மாவட்டப் பொதுச் செயலாளா் எஸ்.கணேஷ், மாவட்டச் செயலாளா் பா.வேதபிரசாத், நாகை ஒன்றியத் துணைத் தலைவா் தாமோதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

SCROLL FOR NEXT