நாகப்பட்டினம்

சீர்காழியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

DIN

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திமுக தொழில்நுட்ப அணி சார்பாக ஊராட்சி ஒன்றிய மற்றும் வார்டு ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்திற்கு நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் ஆலோசனையின் பேரில்  நாகை மாவட்ட திமுக தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஸ்ரீதர் முன்னிலையில் சீர்காழி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் மாநில செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். 

ஆலோசனைக் கூட்டத்தில் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவை வெற்றி பெறச் செய்வது குறித்து தொழில்நுட்ப அணியின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டும் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. 

இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் பன்னீர்செல்வம், சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார், மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகர், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர்கள் ரவிக்குமார் மலர்விழி திருமாவளவன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா அலெக்சாண்டர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT