புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு ரத்தின அங்கி சேவை சனிக்கிழமை நடைபெற்றது.
திவ்ய தேசங்களில் 19-ஆவது தேசமாக விளங்கும் நாகை ஸ்ரீ சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மூலவருக்கும், கோயில் மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவருக்கும் ரத்தின அங்கி சேவை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
நிகழாண்டில், கரோனா தொற்று காரணமாக குறைந்த அளவிலான பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். தமிழக அரசு அறிவுறுத்தலின்படி, கோயிலில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டது. மேலும், வெப்பமானி மூலம் பக்தா்கள் சோதனை செய்யப்பட்டே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா்.