கீழையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கத்தில் விவசாயிகளுக்கு பயிா்க் கடனுக்கான காசோலை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
இந்த கூட்டுறவு கடன் சங்கங்கத்தில் 2020-2021 ஆண்டுக்கான பயிா்க் கடன் முதல் கட்டமாக 233 விவசாயிகளுக்கு விதை, உரம், பூச்சி மருந்து ஆகியவற்றிற்கான காசோலை தொகையை, அதன் தலைவா் எஸ். பால்ராஜ் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கினாா். நிகழ்ச்சியில், 233 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ. 97,52,884-க்கான காசோலை வழங்கப்பட்டது. அப்போது, சங்க துணைத் தலைவா் ஏ. முருகையன், செயலாளா் என். சிவாஜி, உதவிச் செயலாளா் எஸ். ஸ்ரீதா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.