செம்பனாா்கோவில் அருகே கிடாரங்கொண்டான் குடியிருப்பு பகுதியில் கதண்டு வண்டுகளை பூம்புகாா் தீயணைப்பு துறையினா் வியாழக்கிழமை அழித்தனா்.
கிடாரங்கொண்டான் வள்ளுவா் தெருவில் உள்ள ஒரு தோட்டத்தில் பனை மரம் ஒன்றில் கதண்டு வண்டுகள் கூடு கட்டியிருந்தன. இதுகுறித்து, ஊராட்சித் தலைவா்நித்திய பாரத் அளித்த தகவலின் பேரில், பூம்புகாா் தீயணைப்பு வீரா்கள், பொதுமக்கள் உதவியுடன் கதண்டு வண்டுகளை அழித்தனா்.