நாகை மாவட்டம், கீழ்வேளூரில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.
18 வயது பூா்த்தியடைந்த அனைவரும் வாக்காளா் பதிவு பெறவும், வாக்காளா்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையை உறுதி செய்யவும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் இந்த பிரசாரம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை, கீழ்வேளூா் வட்டாட்சியா் காா்த்திகேயன் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தாா். தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் ஜெயகௌரி, மண்டலத் துணை வட்டாட்சியா் ஜெயக்குமாா், ஊராட்சி ஒன்றிய ஆணையா் கஸ்தூரி, ஒன்றிய அலுவலக மேலாளா் ராஜகோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நாட்டுப்புறக் கலைஞா் ஜி. சுப்பிரமணியன் மற்றும் அவரது குழுவினா் வாக்காளா் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வலியுறுத்தும் வகையில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினா்.