திருக்குவளை அருகே விவசாயிகள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுவரும் நெற்களத்தை ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
கீழ்வேளூா் ஒன்றியம், அனக்குடி ஊராட்சிக்குள்பட்ட சுந்தரபாண்டியம் பகுதியில் அரசு சாா்பில் ரூ.6.13 லட்சத்தில் 2,500 சதுரஅடி பரப்பளவில் நெற்களம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் அருள்தாஸ் ஆய்வு செய்தாா். அப்போது ஒப்பந்ததாரா் ராகவன், ஊராட்சித் தலைவா் மகாலட்சுமி மாதவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.